செய்திகள்

மாநில கபடி போட்டியில் பங்கேற்க மாணவ-மாணவிகள் தேர்வு: கடலூரில் நாளை நடக்கிறது

Published On 2016-07-02 16:31 IST   |   Update On 2016-07-02 16:31:00 IST
மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள கடலூர் மாவட்ட மாணவ - மாணவிகள் கபடி அணிகள் தேர்வு நாளை காலை 10 மணிக்கு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.
கடலூர்:

கடலூர் மாவட்ட கபடி கழக தலைவர் வேலவன் உத்தரவின்பேரில் மாவட்ட செயலாளர் நடராஜன் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மாநில சப் - ஜூனியர் கபடி சாம்பியன் ஷிப் போட்டிகள் வருகிற ஜூலை 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடைபெற உள்ளன. ஆண்களுக்கான போட்டி ராமநாதபுரம் மாவட்டத்திலும், பெண்களுக்கான போட்டி திருவண்ணாமலை மாவட்டத்திலும் நடைபெறுகிறது.

இந்த மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள கடலூர் மாவட்ட மாணவ - மாணவிகள் கபடி அணிகள் தேர்வு நாளை 3-ந்தேதி காலை 10 மணிக்கு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.

தேர்வு மாவட்ட கபடி கழக தேர்வு குழுவினரால் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள தகுதிகள் வருமாறு: -

மாணவ - மாணவிகள் 16 வயதுக்குள் இருக்க வேண்டும். உடல் எடை 50 கிலோவுக்குள் இருக்க வேண்டும்.

இந்த தகுதி தேர்வுக்கு வரும் மாணவ - மாணவிகள் தங்கள் வயது சான்றிதழ், ஆதார் அட்டை அல்லது 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மட்டுமே ஏற்று கொள்ளப்படும்.

கபடி போட்டியில் தேர்வு செய்யப்படும் விளையாட்டு வீரர்கள் மாநில போட்டிக்கு செல்ல போக்குவரத்து, உணவு மற்றும் சீருடை மாவட்ட கபடி கழகத்தினரால் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News