செய்திகள்
புழுதிவாக்கம் பறக்கும் ரெயில் நிலையத்தில் கம்பி திருடிய 3 பேர் கைது
புழுதிவாக்கம் பறக்கும் ரெயில் நிலையத்தில் கம்பி திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்:
ஆதம்பாக்கம் அடுத்த மடுவன்கரையைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் சத்தியராஜ், புகழேந்தி ஆகியோர் 2 பேர் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் 3 பேரும் ஒரு மினி வேனில் புழுதிவாக்கம் பறக்கும் ரெயில் நிலைய கட்டுமான பணிக்கு வைத்திருந்த கம்பிகளை திருடிக் கொண்டிருந்தனர்.
இதை பார்த்த ரெயில் நிலைய காவலாளி சத்தம் போட்டார். உடனே ஊழியர்கள் மடக்கி பிடித்து ஆதம்பாக்கம் போலீசில் அவர்களை ஒப்படைத்தனர். அவர்கள் திருடிய கம்பியின் மதிப்பு ரூ. 70 ஆயிரமாகும்.
ஆதம்பாக்கம் அடுத்த மடுவன்கரையைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் சத்தியராஜ், புகழேந்தி ஆகியோர் 2 பேர் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் 3 பேரும் ஒரு மினி வேனில் புழுதிவாக்கம் பறக்கும் ரெயில் நிலைய கட்டுமான பணிக்கு வைத்திருந்த கம்பிகளை திருடிக் கொண்டிருந்தனர்.
இதை பார்த்த ரெயில் நிலைய காவலாளி சத்தம் போட்டார். உடனே ஊழியர்கள் மடக்கி பிடித்து ஆதம்பாக்கம் போலீசில் அவர்களை ஒப்படைத்தனர். அவர்கள் திருடிய கம்பியின் மதிப்பு ரூ. 70 ஆயிரமாகும்.