செய்திகள்
பண்ருட்டி அருகே இளம்பெண் மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண் தேடி வருகிறார்கள்.
பண்ருட்டி:
பண்ருட்டியை அடுத்த கீழ்கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வாசுதேவன் இவரது மனைவி ரேணுகா (வயது 30).
சம்பவத்தன்று இரவில் ரேணுகாவும் அவரது கணவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். காலையில் பார்க்கும் போது ரேணுகாவை காணவில்லை. அதிர்ச்சியடைந்த கணவர் வாசுதேவன் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கங்காதரன் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ரேணுகாவை தேடி வருகிறார்.
பண்ருட்டியை அடுத்த கீழ்கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வாசுதேவன் இவரது மனைவி ரேணுகா (வயது 30).
சம்பவத்தன்று இரவில் ரேணுகாவும் அவரது கணவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். காலையில் பார்க்கும் போது ரேணுகாவை காணவில்லை. அதிர்ச்சியடைந்த கணவர் வாசுதேவன் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கங்காதரன் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ரேணுகாவை தேடி வருகிறார்.