செய்திகள்
பெண்ணாடம் கஞ்சா வைத்திருந்த 2 பெண்கள் கைது
பெண்ணாடம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
பெண்ணாடம்:
பெண்ணாடம் அடுத்த எரையூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிமேகலை(வயது 35). இவரின் வீட்டின் அருகே வசிப்பவர் ராஜேஸ்வரி(42). இவர்கள் 2 பேர் மீதும் ஏற்கனவே கஞ்சா விற்றதாக வழக்கு உள்ளது.
சம்பவத்தன்று பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் எரையூர் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை பார்த்து மணிமேகலை மற்றும் ராஜேஸ்வரி பதுங்கினர். இதைபார்த்த போலீசார் சந்தேகப்பட்டு அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர்.
பின்னர் 2 பேரையும் சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
பெண்ணாடம் அடுத்த எரையூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிமேகலை(வயது 35). இவரின் வீட்டின் அருகே வசிப்பவர் ராஜேஸ்வரி(42). இவர்கள் 2 பேர் மீதும் ஏற்கனவே கஞ்சா விற்றதாக வழக்கு உள்ளது.
சம்பவத்தன்று பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் எரையூர் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை பார்த்து மணிமேகலை மற்றும் ராஜேஸ்வரி பதுங்கினர். இதைபார்த்த போலீசார் சந்தேகப்பட்டு அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர்.
பின்னர் 2 பேரையும் சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.