செய்திகள்

பெண்ணாடத்தில் கனமழை: மோட்டார் சைக்கிள்கள்-தென்னை மரம் சேதம்

Published On 2016-06-21 21:34 IST   |   Update On 2016-06-21 21:42:00 IST
பெண்ணாடம் பகுதியில் பலத்த இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் மோட்டார் சைக்கிள்கள்-தென்னை மரம் சேதம் அடைந்தது.
பெண்ணாடம்:

பெண்ணாடம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. முழங்கால் வரை தண்ணீர் சென்றது.

இந்நிலையில் திட்டக்குடியை அடுத்த தெருமுனை கிராமத்தில் பலத்த இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்தது. அப்போது பலத்த இடி இடித்தது. அது சாலையோரம் இருந்த ஒரு தென்னை மரத்தை தாக்கியது. இதில் தென்னை மரம் முழுவதும் எரிந்து சாம்பலானது.

அதே போல் பெண்ணாடம் பஸ் நிலையம் முன்பு சுமார் 10-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிந்தது. மழை நீர் அதிகமாக சென்றதால் அங்கிருந்த மோட்டார் சைக்கிள் நீரில் மூழ்கி சேதமடைந்தது.

Similar News