செய்திகள்

கடலூர் அருகே ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலி

Published On 2016-06-21 21:09 IST   |   Update On 2016-06-21 21:09:00 IST
கடலூர் அருகே ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
கடலூர்:

புதுவை அரியாங்குப்பம் மணவெளி பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன்(வயது 20). இவர் தவளக்குப்பத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார்.

கடலூர் அருகே ரெட்டிச்சாவடி சந்திக்குப்பம் பகுதியில் உள்ள சங்கராபரணி ஆற்றுக்கு நண்பர்களுடன் குளிக்க வந்தார். ஆற்றில் இறங்கி குளித்தார். அவரது நண்பர்களும் குளித்தனர்.

அப்போது ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற தமிழரசன் சுழலில் சிக்கினார். ‘காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்’ என்று அபயக்குரல் எழுப்பினார். அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். அவர்களின் முயற்சிக்கு பலன் இல்லை. ஆற்றில் மூழ்கி தமிழரசன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தமிழரசனின் உடலை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆற்றில் மூழ்கி பலியான தமிழரசனின் உடலை பார்த்து அவரது நண்பர்கள் கண்ணீர் விட்டு கதறியது பார்ப்பவர்களின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

Similar News