செய்திகள்

காஞ்சிபுரத்தில் புதுப்பட சி.டி. விற்ற 2 பேர் கைது

Published On 2016-06-21 11:49 IST   |   Update On 2016-06-21 11:50:00 IST
காஞ்சிபுரத்தில் புதுப்பட சிடிக்கள் விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் புதுப்பட சிடிக்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விஷ்ணுகாஞ்சி இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி உத்தரவின் பேரில் போலீசார் காவலான் கேட் மற்றும் ரயில்வே ரோடு பகுதிகளில் உள்ள சி.டி. கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது உறியடி, இது நம் ஆளு, உள்ளிட்ட 761 புதுப்பட சிடிக்கள் கைப்பற்றினர். இதனையடுத்து புதுப்பட சிடிக்கள் விற்பனை செய்த திருக்காலிமேடு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், தாயார் குளம் வைத்தியநாதன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News