செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணல் திருடிய 5 பேர் கைது

Published On 2016-06-20 14:18 IST   |   Update On 2016-06-20 14:18:00 IST
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணல் திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி மற்றும் டிராக்டர் பறிமுதல் செய்தனர்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு கூட்டுச்சாலை பகுதியில் காஞ்சிபுரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை உத்தரவின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய அதே பகுதியை சேர்ந்த பன்னீர், கஜேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோன்று மதுராந்தகம் அடுத்த சூனாம்பேடு பகுதியில் ஆற்றுப்படுகையில் மணல் திருடிய அதே பகுதியைச் சேர்ந்த பாலுவை போலீசார் கைது செய்தனர். மாமல்லபுரம் பகுதியில் மணல் கடத்திய லாரியை பறிமுதல் செய்த போலீசார் லாரி டிரைவர் இளங்கோ மற்றும் கிளீனர் விஜயகுமார் ஆகியோரை கைது செய்தனர்.

Similar News