செய்திகள்

செங்கல்பட்டு அருகே ஏரியில் வாலிபர் பிணம்- கொலையா? போலீசார் விசாரணை

Published On 2016-06-20 12:05 IST   |   Update On 2016-06-20 12:05:00 IST
செங்கல்பட்டு அருகே ஏரியில் வாலிபர் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டை அடுத்த ஆத்தூர் அருகே உள்ள குப்பம் ஏரியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் செங்கல்பட்டு தாலுக்கா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

பிணமாக கிடந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. லுங்கியும், டி-சர்ட்டும் அணிந்து இருந்தார். முன்விரோதத்தில் அவரை யாரேனும் கடத்தி வந்து கொன்று ஏரியில் வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. ஏரியில் வாலிபர் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News