செய்திகள்

காஞ்சிபுரம் அருகே கார் மோதி தொழிலாளி பலி

Published On 2016-06-19 11:49 IST   |   Update On 2016-06-19 11:49:00 IST
காஞ்சிபுரம் அருகே கார் மோதி தொழிலாளி பலியானார்.

காஞ்சிபுரம்:

திருவண்ணாமலை அருகே உள்ள அரசங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகாந்த் (26) கட்டிட சென்டிரிங் வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி பானுமதி. கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் காஞ்சிபுரம் அருகே பாலுச் செட்டிசத்திரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். பாலுச் செட்டிசத்திரம் அருகே திருப்புட்குழி பகுதியில் சாலையை கடந்த போது எதிரே வந்த கார் பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி எறியப்பட்டனர்.

சம்பவ இடத்திலேயே விஜயகாந்த் துடிதுடித்து பரிதாபமாக பலியானார். படுகாயம் அடைந்த பானுமதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News