செய்திகள்

கந்தர்வக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் பலி

Published On 2016-06-16 12:49 IST   |   Update On 2016-06-16 12:49:00 IST
கந்தர்வக்கோட்டை அருகே மின் கம்பத்தில் ஏறி ஒயர் சரி செய்த போது மின்சாரம் தாக்கி ஊழியர் பலியானார்
கந்தர்வக்கோட்டை:

கந்தர்வக்கோட்டை அருகே உள்ள பழைய கந்தர்வக்கோட்டையை சேர்ந்தவர் சண்முகம் (வயது 46). மின்சாரா வாரியத்தில் ஒயர் மேனாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு 1 மகனும், 1 மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு சென்றுள்ளார் இவருடன் கருப்பையா என்பவரும் இவர்களுக்கு உதவியாக ஒருவரும் சென்றுள்ளனர். கந்தர்வக் கோட்டைக்கு அருகே உள்ள வான்டையான் பட்டி என்ற கிராமத்தில் உள்ள ஒரு மின்கம்பத்தை சரி செய்வதற்காக சண்முகம் மின் கம்பத்தின் மீது ஏறி மின் ஒயர்களை சரி செய்து கொண்டிருந்தார்.

அப்போது உதவியாளர் கருப்பையா என்பவரின் கவன குறைவால் எதிர்பாராதவிதமாக சண்முகத்தின் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதனால் காயமடைந்த அவரை மீட்டு கந்தர்வக் கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சண்முகம் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கந்தர்வக் கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கருப்பையாவின் கவன குறைவால் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுவதால் மேல் அதிகாரிகள் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலியான சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News