செய்திகள்

புதுக்கோட்டை அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி பலி

Published On 2016-06-12 12:09 IST   |   Update On 2016-06-12 12:09:00 IST
புதுக்கோட்டை அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்ததன் காரணமாக தொழிலாளி ஒருவர் பலியானார்
கீரனூர்:

கீரனூர் பஸ் நிலையம் அருகில் ஒதுக்குபுறமாக உள்ள கட்டிடத்தில் இன்று காலை வாலிபர் பிணம் கிடப்பதாக கீரனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இது குறித்து இன்ஸ்பெக்டர் ஞானவேலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் அருகே மது பாட்டில்கள் கிடந்தது.

இறந்தவர் பெயர் விவரம் குறித்து விசாரணை நடத்திய போது, அம்மாச்சத்திரத்தை சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி கருப்பையா (வயது 45) என்பது தெரிய வந்தது.

அளவுக்கு அதிகமாக மது குடித்ததன் காரணமாக அவர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கருப்பையா உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Similar News