செய்திகள்

அறந்தாங்கி அருகே எலி மருந்தை தின்று வாலிபர் தற்கொலை

Published On 2016-06-09 21:46 IST   |   Update On 2016-06-09 21:47:00 IST
அறந்தாங்கி அருகே தனியார் நிறுவனத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த வாலிபர், எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
அறந்தாங்கி:

அறந்தாங்கியை அடுத்த ஆயிங்குடி தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் குமரேசன்.(வயது 19). இவர் அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த 2 ந் தேதி எலிகளை கொல்ல பயன்படுத்தப்படும் விசத்தன்மை கொண்ட பேஸ்ட் சாப்பிட்டு உள்ளார். இதை அவர் யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் மறுநாள் குமரேசன் சோர்ந்து காணப்பட்டதால், அவரது பெற்றோர் அவரிடம் விசாரித்தனர்.

அப்போது குமரேசன் எலி விசம் சாப்பிட்ட விபரத்தை கூறியுள்ளார். உடனே அவர்கள் குமரேசனை சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து, குமரேசன் எதற்காக விசத்தை சாப்பிட்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News