செய்திகள்

அறந்தாங்கி அருகே விவசாயி வீட்டில் 15 சவரன் நகை கொள்ளை

Published On 2016-06-09 17:59 IST   |   Update On 2016-06-09 17:59:00 IST
அறந்தாங்கி அருகே விவசாயி வீட்டில் 15 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அறந்தாங்கி:

அறந்தாங்கி திருநாளூர் அடுத்த பேயன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கருப்பையா, விவசாயி. இவரது மனைவி செல்லம்மாள், இவர்களது மகன் மதியழகன் (வயது 35) இவருக்கு திருமணம் முடிந்து மாரியம்மாள் என்ற மனைவியும், சர்மிளா, ஜனனி, வின்னிஸ் என்ற 3 மகள்களும் உள்ளனர். மதியழகன் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் கருப்பையா மற்றும் அவரது மனைவி செல்லாம்மாள் எப்போதும் இரவு நேரத்தில் வீட்டிற்கு வெளியே தான் தூங்குவார்கள். மருமகள் மற்றும் பேர குழந்தைகள் வீட்டின் கதவை திறந்து வைத்து வீட்டிற்கு உள்ளே படுத்திருப்பார்கள்.
நேற்று வழக்கம் போல் இரவு 9 மணிக்கு அனைவரும் தூங்க சென்றுவிட்டனர். இரவு 12 மணியளவில் செல்லமாள் திடீர்ரென எழுந்து உள்ளார்.

அப்போது வீட்டின் உள்ளே இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன, இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்லமாள் உள்ளே சென்று பீரோவை திறந்து பார்த்துள்ளார்.

அப்போது அங்கு வைத்திருந்த 15 சவரன் தங்க நகைகள் மற்றும் 2 ஜோடி வெள்ளி கொலுசு மேலும் செல்போன் ஆகியவை திருடு போய் இருப்பது தெரியவந்தது. உடனே தனது செல்போனுக்கு வேறு செல்போனிலிருந்து கால் செய்துள்ளார். அப்போது அந்த போனை எடுத்து சென்ற அந்த மர்ம நபர் தவறுதலாக செல்போனை ஆன் செய்துவிட்டார்.

செல்போனை திருடி சென்ற நபர் எதோ கோவில் திருவிழாவில் இருப்பது போன்று சத்தம் கேட்டுள்ளது. இதை சுதாரித்த அந்த மர்ம நபர் உடனே செல்போனை ஆப் செய்துவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து கருப்பையா அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் திருவிழா சத்தம் கேட்டதால் இந்த பகுதியை சேர்ந்த யாரோ ஒருவர் தான் திருடி சென்றிருக்க வேண்டும் என்று போலீசார்

இந்த திருட்டு சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News