செய்திகள்

துபாயில் விபத்தில் பலியான நாகை வாலிபர் உடலை பெற்றுத்தரக்கோரி கலெக்டரிடம் மனைவி மனு

Published On 2016-06-07 17:48 IST   |   Update On 2016-06-07 17:48:00 IST
துபாயில் விபத்தில் பலியான நாகை வாலிபரின் உடலை பெற்றுத்தரக்கோரி கலெக்டர் பழனிச்சாமியிடம், மனைவி மனு அளித்துள்ளார்.
நாகை:

நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா வழுதலைக்குடி அக்ரஹாரத்து மேடு பகுதியை சேர்ந்தவர் சரவணன். கொத்தனார். இவரது மனைவி முத்தரசி. இவர் நேற்று நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் பழனிச்சாமியிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-

என் கணவர் கடந்த ஆண்டு துபாய் நாட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் கொத்தனார் வேலை பார்ப்பதற்காக உரிய பாஸ்போர்ட், விசாவுடன் சென்றார். கடந்த 2ந்தேதி பணியில் இருந்த போது ஏற்பட்ட ஒரு விபத்தில் சிக்கி இறந்து விட்டதாக, அங்குள்ள என் உறவினர் ஒருவர் செல்போன் மூலம் தெரிவித்தார்.

அவரது உடல் ஷிகிமிதி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். துபாய் சென்று என் கணவரின் உடலை வாங்கி வரும் அளவிற்கு எனக்கு வசதியில்லை. நான் மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவள்.

என் மீது கருணை காட்டி, என் கணவரின் உடலை இந்திய தூதரகம் மூலம் பெற்று திருச்சி விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கும்படி வேண்டி கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

Similar News