செய்திகள்
வேதாரண்யம் அருகே ரோட்டில் மது குடித்த 2 பேர் கைது
வேதாரண்யம் அருகே ரோட்டில் 2 பேர் மது குடித்து கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள ஆண்டகத்துறையைச் சேர்ந்தவர் சேகர். இவரும் கரியாப்பட்டினத்தை சேர்ந்த சித்திரவேல் என்பவரும் செண்பகராயநல்லூர் என்ற இடத்தில் மோட்டர் சைக்கிளை நிறுத்தி வைத்து மது குடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் அவர்களை கண்டித்தார்.
அப்போது ரகளையில் ஈடுபட்ட அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.