செய்திகள்
வேதாரண்யத்தில் கோடைவெயில் கொளுத்திய நிலையில் நேற்று இரவு 8.40 மணியளவில் தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் கோடைவெயில் கொளுத்திய நிலையில் நேற்று இரவு 8.40 மணியளவில் தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யத்தில் 20.4 மில்லி மீட்டர் மழையும், தலைஞாயிறில் 44.4 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. இதைப்போல் தஞ்சை மாவட்டத்திலும் நேற்று சில இடங்களில் மழை பெய்தது.
கும்பகோணத்தில் நேற்று மாலை 1 மணிநேரம் மழை பெய்தது. தஞ்சையில் நேற்று மாலை மேகம் கருத்து மழைபெய்வது போல் இருந்தது ஆனால் மழை பெய்யவில்லை.