செய்திகள்

சீர்காழி அருகே குழந்தைகளுடன் பெண் மாயம்

Published On 2016-06-04 17:04 IST   |   Update On 2016-06-04 17:04:00 IST
சீர்காழி அருகே குழந்தைகளுடன் பெண் மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீர்காழி:

சீர்காழி அருகே உள்ள பழையாறு சுனாமி நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி கலைச்செல்வி(வயது 26). இவர்களுக்கு சுபிக்ஷா(5), அருண்(2) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 29-ந்தேதி சுரேஷ் மனைவி கலைச்செல்வி குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். பின்னர் காலையில் எழுந்து பார்த்த போது அவரது மனைவி, குழந்தைகளை காணவில்லை. உடனே அவர் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தார். ஆனால் எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.

இதுகுறித்து சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் புதுப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News