செய்திகள்

வேளாங்கண்ணியில் வாலிபர் தற்கொலை

Published On 2016-06-03 16:08 IST   |   Update On 2016-06-03 16:08:00 IST
வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம்:

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் செல்வகுமார் (வயது 24) இவர் கம்பியூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்து வந்தார். இதில் மனமுடைந்து காணப்பட்ட அவர் கடந்த 30–ந் தேதி நாகை மாவட்டம் வேளாங்கண்ணி வந்தார். அங்குள்ள லார்ஜில் தங்கியிருந்த அவர் நேற்று விஷமாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் வேளாங்கண்ணி இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட செல்வக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

நாகப்பட்டினம் அருகே உள்ள நாகூர் ஆண்டவர் தர்ஹா குளத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பது தெரியவந்தது. அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது. அவர் யார் ? எந்த ஊரைச்சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இது பற்றி தகவல் கிடைத்ததும் நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News