செய்திகள்
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அலைவீசுகிறது: தேர்தல் பிரசாரத்தில் குஷ்பு பேச்சு
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அலைவீசுகிறது என காட்டுமன்னார்கோவில் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் குஷ்பு கூறியுள்ளார்.
காட்டுமன்னார்கோவில்:
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக மணிரத்தினம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் குஷ்பு தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–
நான் இதுவரை 30 தொகுதி மக்களை சந்தித்து பிரசாரம் செய்துள்ளேன். தமிழகம் முழுவதும் ஒரு மிகப்பெரிய அலை வீசுகிறது. அந்த அலை ஆட்சி மாற்றத்திற்கான அலை.
முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அலை. கொடநாட்டிற்கு நிரந்தரமாக ஓய்வெடுக்க அனுப்பி வைக்கும் அலை.
கருணாநிதி 6–வது முறையாக முதல்–அமைச்சராக ஏற்பட்டுள்ள அலை. 5 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை கூட நிறைவேற்றவில்லை.
அ.தி.மு.க. ஆட்சியில் சாதி பிரச்சினை அதிகரித்துள்ளது. அனைவரும் சம நல்லிணக்கத்தோடு வாழும் வாய்ப்பு கலைஞர் ஆட்சியில் மட்டும்தான் நடக்கும். உங்களுக்காக வேலை செய்கின்ற ஒருவர் தமிழ்நாட்டை ஆளவேண்டும். அவர்தான் கருணாநிதி. அவர் ஆட்சி பொறுப்பேற்றதும் தி.மு.க., காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். திட்டங்கள் அனைத்தும் உங்கள் வீடு தேடி வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக மணிரத்தினம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் குஷ்பு தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–
நான் இதுவரை 30 தொகுதி மக்களை சந்தித்து பிரசாரம் செய்துள்ளேன். தமிழகம் முழுவதும் ஒரு மிகப்பெரிய அலை வீசுகிறது. அந்த அலை ஆட்சி மாற்றத்திற்கான அலை.
முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அலை. கொடநாட்டிற்கு நிரந்தரமாக ஓய்வெடுக்க அனுப்பி வைக்கும் அலை.
கருணாநிதி 6–வது முறையாக முதல்–அமைச்சராக ஏற்பட்டுள்ள அலை. 5 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை கூட நிறைவேற்றவில்லை.
அ.தி.மு.க. ஆட்சியில் சாதி பிரச்சினை அதிகரித்துள்ளது. அனைவரும் சம நல்லிணக்கத்தோடு வாழும் வாய்ப்பு கலைஞர் ஆட்சியில் மட்டும்தான் நடக்கும். உங்களுக்காக வேலை செய்கின்ற ஒருவர் தமிழ்நாட்டை ஆளவேண்டும். அவர்தான் கருணாநிதி. அவர் ஆட்சி பொறுப்பேற்றதும் தி.மு.க., காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். திட்டங்கள் அனைத்தும் உங்கள் வீடு தேடி வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.