செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்து பார்வையாளர் ஆய்வு

Published On 2016-04-25 12:59 IST   |   Update On 2016-04-25 12:59:00 IST
அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்து பார்வையாளர் ஆய்வு

அரியலூர்:

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் பார்வையாளர் (காவல்) சி.வி.ஆனந்த், அரியலூர் மாவட்டத்தில் மேற் கொள்ளப்படும் தேர்தல் பணிகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சரவண வேல்ராஜ், மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஆலோசனை மேற் கொண்டார்.

கூட்டத்தில், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை மேற் கொள்ளப்பட்டு வரும் தேர்தல் பணிகள், தேர்தல் விழிப்புணர்வு பணிகள், ஊடகச் சான்றிதழ் வழங்கும் குழு பணிகள், பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோக் கண்காணிப்புக்குழு உள்ளிட்ட பணிகள் குறித்தும் ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்ட தொகைகள் அவற்றை மீள ஒப்படைச்செய்யத விவரங்கள் உள்ளிட்டவை குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டு, உரிய அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

முன்னதாக, தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடகச் சான்றிதழ் வழங்கும் அறை உள்ளிட்டவைகளை பார்வையிட்டும், மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவீந்திரன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பா.லலிதாவதி, திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை சரஸ்வதி கணேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News