கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 20 சட்டசபை தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது
கடலூர்:
தமிழக சட்டசபை தேர்தல் மே மாதம் 16–ந் தேதி நடைபெறுகிறது. தேர் தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.
இந்த தேர்தலில் வேட்பாளர்களின் வசதியை கருதி அந்தந்த தொகுதிகளி லேயே வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலரே வேட்பு மனுக்களை பெற்றனர்.
அதன்படி திட்டக்குடி (தனி)தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் திட்டக்குடி தாலுகா அலுவலகத்திலும், விருத்தாச்சலம் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் விருத்தாச்சலம் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், நெய்வேலி தொகுதிக்கான வேட்பு மனுக்கள் மந்தாரக்குப்பத்தில் உள்ள தனித்துணை கலெக்டர் (நிலம் எடுப்பு) அலுவலகத்திலும் நடைபெற்றது.
பண்ருட்டி தொகுதிக்கான வேட்பு மனுதாக்கல் தாலுகா அலுவலகத்திலும், கடலூர் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் நடந்தது.
புவனகிரி தொகுதிக்கான வேட்பு மனுக்கள் புவனகிரி தாலுகா அலுவலகத்திலும், சிதம்பரம் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், காட்டுமன்னார் கோவில் (தனி) தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் 11 சட்டசபை தொகுதிகள் உள்ளன. செஞ்சி தொகுதிக்கு செஞ்சி தாலுகா அலுவலகத்திலும், மயிலம் தொகுதிக்கு மயிலம் தாலுகா அலுவலகத்திலும், திண்டிவணம் தொகுதிக்கு திண்டிவனம் சப்–கலெக்டர் அலுவலகத்திலும், வானூர் தொகுதிக்கு வானூர் தாலுகா அலுவலகத்திலும் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
இதே போல விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விழுப்புரம் தொகுதிக்கும், விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் விக்கிரவாண்டி தொகுதிக்கும், திருக்கோவிலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திருக்கோவிலூர் தொகுதிக்கும், உளுந்தூர் பேட்டை தாலுகா அலுவலகத்தில் உளுந்தூர்பேட்டை தொகுதிக்கும் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ரிஷிவந்தியம் தொகுதிக் கும், சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் சங்கராபுரம் தொகுதிக்கும், கள்ளக்குறிச்சி தொகுதிக்கு கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்திலும் வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்கியது. இதையொட்டி அந்தந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள் 29–ந் தேதி ஆகும். மே மாதம் 2–ந் தேதி மாலை 3 மணி வரை மனுக்களை வாபஸ் பெற்றுக்கொள்ளலாம். பின்னர் அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.