செய்திகள்

வீட்டுமனை பட்டா வழங்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம்: கீரனூர் பொதுமக்கள் எச்சரிக்கை

Published On 2016-04-22 17:55 IST   |   Update On 2016-04-22 17:55:00 IST
கீரனூரில் வீட்டுமனை பட்டா வழங்காவிட்டால் வரும் சட்டமன்ற தேர்த்லை புறக்கணிப்போம் என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
கீரனூர்:

கீரனூர் பழைய கள்ளுக்கடைத்தெரு சத்தியமூர்த்தி நகர், பள்ளிவாசல் வடக்கு மற்றும் தெற்கு ஜெகநாதபுரம், எழில் நகர், வாடிவாசல் தெரு பகுதிகளில் நிரந்தரமாக 80 வருடங்களுக்கு மேலாக குடியிருந்து வரும் மக்களுக்கு மனைப்பட்டா வழங்கப்படவில்லை. அனைத்து கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை வீட்டுமனை குடியுரிமை பட்டா அரசு தரப்பிலிருந்து கொடுக்கவில்லை.

எனவே அந்த பகுதியில் வசிக்கும் 267 குடும்பத்தை சார்ந்தவர்கள் மேலும் அவர்களுக்கு ஆதரவாக உள்ள பொதுமக்கள் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

வரும் மே 2–ந் தேதி அனைத்து கட்சி சார்பில் நகர விவசாய சங்கத்தலைவர் கோவில் ராஜ் தலைமையில் இந்திய கம்யுனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் நடராசன், தி.மு.க நகரச் செயளாளர் பழனியப்பன், மாவட்ட பிரதிநிதி அசரம்அலி, நகர காங்கிரஸ் தலைவர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதமும், அடுத்த கட்டமாக ரேசன்காடு, ஆதார் அட்டைகளை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டமும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News