செய்திகள்

பறக்கும் படை சோதனையில் மலேசிய பணம் சிக்கியது

Published On 2016-04-22 16:00 IST   |   Update On 2016-04-22 17:51:00 IST
வேதாரண்யம் அருகே பறக்கும் படை சோதனையின் போது மலேசிய பணம் சிக்கியது.
வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே உள்ள வேட்டைக்காரனிருப்பு மெயின் ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் மலேசிய நாட்டு பணம் (ரிங்கிட்) சிக்கியது. இதன் இந்திய மதிப்பு ரூ. 2 லட்சத்து 26 ஆயிரத்து 240 ஆகும். இது குறித்து பறக்கும் படையினர் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது காரில் வந்தவர்கள் மலேசிய நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் என்பது தெரிய வந்தது. அவர்களின் பாஸ்போர்ட் மற்றும் பணம் தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். ஆவணங்கள் சரியாக இருந்ததால் அந்த பணம் மலேசிய சுற்றுலா பயணிகளிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

Similar News