செய்திகள்

வேதராண்யம் பகுதியில் திடீர் கோடை மழை

Published On 2016-04-21 20:41 IST   |   Update On 2016-04-21 20:41:00 IST
நாகை மாவட்டம் வேதராண்யம் பகுதியில் திடீர் கோடை மழை பெய்தது.

வேதராண்யம்:

தமிழகத்தில் கோடை வெயில் கடந்த சில நாட்களாக சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் ஒருசில இடங்களில் மழை பெய்யலாம் என்ற வானிலை அறிவிப்பு தமிழகம் முழுவதும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கடும் வெயிலுக்கு இடையே வானம் அவ்வப்போது மேகமூட்டத்துடன் காணப்படும் போது நிச்சயம் நமது பகுதியில் தான் மழை பெய்யும் என்று எதிர்பார்த்து ஏமாந்தும் வந்தனர்.

இந்நிலையில் நாகை மாவட்டம் வேதராண்யம் பகுதியில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. எங்கே வருவது போல் ஏமாற்றி விடுமோ மழை என்று மக்கள் நினைத்திருந்தனர். அப்போது திடீரென மழை பெய்யத்தொடங்கியது. சிறிது நேரமே மழை நீடித்தாலும் கோடை வெயிலில் இருந்து நிரந்தரமாக தப்பியது போன்ற சங்தோஷத்தை மக்கள் அடைந்தனர்.

Similar News