செய்திகள்
பொன்னமராவதி அருகே இறந்து கிடந்த காட்டெருமை
பொன்னமராவதி அருகே விஷ வண்டுகள் கடித்து காட்டெருமை பலி.
பொன்னமராவதி:
பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் வருவாய் கிராமத்தில் வைரம்பட்டி வெள்ளையன், காடன் ஆகியோர்களுக்கு சொந்தமாக இடம் உள்ளது. இந்த பகுதியில் காட்டு எருமை இறந்து கிடப்பதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் சென்று பார்த்தனர். பின்னர் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
வனச்சரகர் சதாசிவம், வனவர்கள் பெரமன், ஆரோக்கியதாஸ், வனக்காப்பாளர்கள் சுந்தர்ராஜ், சங்கிலி, வனக்காவலர் முதலியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் கால்நடை மருத்துவர்கள் மூலம் சம்பவ இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த காட்டெருமை விஷ வண்டுகள் கடித்து இறந்திருக்கலாம் என தெரிகிறது.