செய்திகள்

விராலிமலை அருகே இளம்பெண் மாயம்

Published On 2016-04-20 21:37 IST   |   Update On 2016-04-20 21:37:00 IST
விராலிமலை அருகே ஜவுளி கடைக்கு சென்ற இளம்பெண் மாயமானார்.

விராலிமலை:

விராலிமலை அருகே உள்ள தங்கம் பட்டியை சேர்ந்தவர் பிச்சை (வயது 50), இவளுடைய மகள் ரேவதி (18), ஜவுளி கடையில் வேளை செய்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நேற்று முந்தைய தினம் ரேவதி வேளைக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் வீட்டுக்கு திரும்பி வரவேயில்லை. இதனால் பிச்சை பல இடங்களிலும் விசாரித்தும் ரேவதி கிடைக்காததால் விராலிமலை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இதன் மூலம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News