செய்திகள்

நாகையில் கத்தியால் குத்தி வாலிபர் கொலை

Published On 2016-04-20 19:12 IST   |   Update On 2016-04-20 19:12:00 IST
நாகையில் கத்தியால் குத்தி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் கீச்சாங்குப்பம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் காத்தவராயன். இவருக்கு சுந்தரவேல் (36), சிங்காரவேல் (26), மணிவேல் (23), சக்திவேல் (20) ஆகிய 4 மகன்கள் உண்டு. இதில் சக்திவேலை தவிர மற்ற 3 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் சக்திவேலை திருமணம் செய்ய சொல்லி அவரது அக்காள் ஜெயந்தி வற்புறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக நேற்று சக்திவேலுக்கும் அவரது சகோதரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சிங்காரவேல், சக்திவேலையும், மணிவேலையும் கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்று விட்டார். இதில் படுகாயம் அடைந்த சக்திவேலையும், மணிவேலையும் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சக்திவேல் பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலை குறித்து நாகை டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன் சிங்கார வேலை கைது செய்தனர். இந்த சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News