கீரனூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 3 பேர் படுகாயம்
கீரனூர்:
கீரனூரங அருகே உள்ள மங்கா தேவன்பட்டியை சேர்ந்தவர் சைவராஜ் (வயது 55). இவர் அந்த பகுதியல் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். அவர் கீரனூருக்கு வேலை காரணமாக சென்றுள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து மங்காதேவபட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
மோசகுடி விலக்கு பகுதியல் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்த போது எதிரே புதுக்கோட்டையை சேர்ந்த சர்புதீன் (51). பழனிவேல் (48), இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். இந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக சைவராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது அதில் சர்புதீன், பழனிவேல், சைவராஜ் ஆகியோர் தூக்கிவீசப்பட்டனர்.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.