செய்திகள்

தேர்தலை புறக்கணிக்க 10 மீனவ கிராமங்கள் முடிவு: தரங்கம்பாடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படாததற்கு கண்டனம்

Published On 2016-04-18 22:34 IST   |   Update On 2016-04-18 22:35:00 IST
தரங்கம்பாடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படாததற்கு கண்டனம் தெரிவித்து 10 மீனவ கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செயதுள்ளனர்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் தரங்கம்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தங்கள் பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவருகின்றனர். இதற்காக போராட்டங்களும் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் 10 மீனவ கிராமங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் நேற்று தரங்கம்பாடியில் கூடி ஆலோசனை நடத்தினர். அப்போது, மீன்பிடி துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து மே 16-ம் தேதி நடைபெற உள்ள தேர்தலை புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டது.

“மீன்பிடி துறைமுகம் தேவை என்பதை கடந்த 15 ஆண்டுகளாக மீனவர்கள் வலியுறுத்தினர். இத்தனை ஆண்டுகளும் எந்த அரசியல் கட்சியும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இந்த கோரிக்கைக்காக கடந்த ஆண்டு மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தது. எனினும் ஒன்றும் நடக்கவில்லை.

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் தேர்தலை புறக்கணிப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

Similar News