செய்திகள்

மகாவீர் ஜெயந்தியையொட்டி திருச்சி- புதுக்கோட்டை மாவட்டத்தில் 19-ந்தேதி மதுக்கடைகள் மூடல்

Published On 2016-04-17 21:54 IST   |   Update On 2016-04-17 21:54:00 IST
மகாவீர் ஜெயந்தியையொட்டி திருச்சி- புதுக்கோட்டை மாவட்டத்தில் 19-ந்தேதி மதுக்கடைகள் மூடப்படும்.
புதுக்கோட்டை:

திருச்சி மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் ஆகியோர்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

வருகிற 19-ந்தேதி மஹாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டும், அடுத்த மாதம் 1-ந்தேதி மே தினத்தை முன்னிட்டும், டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து இந்திய தயாரிப்பு அந்நிய மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களில் விற்பனை நடைபெறாமல் மூடப்பட்டு இருக்க வேண்டும்.

எனவே, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகள் மதுபான கூடங்கள்(பார்) மற்றும் ஓட்டல் பார்கள் ஆகியவற்றில் மேற்கண்ட இரண்டு நாட்களும் மது விற்பனை ஏதும் நடை பெறக்கூடாது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Similar News