செய்திகள்
பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது
பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது
கடலூர்:
கடலூர் மாவட்டம் ஏந்தல் கிராமத்தை சேர்ந்த அய்யாக் கண்ணு என்பவரது மகன்கள் 4 பேருக்கான தலா 36.5 சென்ட் நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் நிலத்துக்கான பட்டா வழங்குவதற்காக சிறுப்பாக்கம் சர்வேயர் உதயசந்திரன் (வயது 58) ரூ.18 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.
இதுகுறித்து அய்யாக்கண்ணுவின் மகன்கள் மணிகண்டன் உள்பட 4 பேரும் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தனர். அதிகாரிகளின் திட்டப்படி, ரூ.18 ஆயிரம் லஞ்சம் பெற முயன்ற சர்வேயர் உதயசந்திரன் நேற்று கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம் ஏந்தல் கிராமத்தை சேர்ந்த அய்யாக் கண்ணு என்பவரது மகன்கள் 4 பேருக்கான தலா 36.5 சென்ட் நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் நிலத்துக்கான பட்டா வழங்குவதற்காக சிறுப்பாக்கம் சர்வேயர் உதயசந்திரன் (வயது 58) ரூ.18 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.
இதுகுறித்து அய்யாக்கண்ணுவின் மகன்கள் மணிகண்டன் உள்பட 4 பேரும் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தனர். அதிகாரிகளின் திட்டப்படி, ரூ.18 ஆயிரம் லஞ்சம் பெற முயன்ற சர்வேயர் உதயசந்திரன் நேற்று கைது செய்யப்பட்டார்.