செய்திகள்

கோவில் நிலத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட செங்கல் கால்வாய்: செங்கற்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

Published On 2016-04-16 23:02 IST   |   Update On 2016-04-16 23:02:00 IST
கோவில் நிலத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட செங்கல் கால்வாய். 35 ஆயிரம் செங்கற்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறையில் திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் இந்து அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

இக்கோவிலுக்கு சொந்தமான நிலங்களை குத்தகைக்கு எடுத்து பயன் படுத்தப்பட்டு வருகிறது. கழுகானிமுட்டம் பகுதியில் கலியமூர்த்தி என்பவர் கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நஞ்சை நிலத்தில் நெல் சாகுபடியை கடந்த 25 ஆண்டுகாலமாக செய்து வருகிறார்.

தற்போது இந்த நிலத்தில் செங்கல் கால்வாய் அமைத்து நிலத்தை பாழ்படுத்தியுள்ளார். இத்தகவல் இந்து அறநிலையத் துறைக்கு தெரியவர இணை ஆணையர் கஜேந்திரன் உத்தரவின் பேரில் கும்பகோணம் உதவி ஆணையர்ஞானசேகரன் தலைமையில் செயல் அலுவலர் சுரேஷ் மற்றும் மயிலாடுதுறை போலீசார் உதவியுடன் விளைநிலத்தை பாழ்படுத்திய இடத்தில் உள்ள கால்வாயில் சுமார் 35 ஆயிரம் செங்கற்களை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து இந்து அறநிலையத்துறை அதிகாரி கூறுகையில், கடந்த சில வருடங்களாக கோவிலுக்கு வழங்க வேண்டிய சுமார் 100 குவிண்டால் நெல் வழங்க வில்லை. இங்கு செங்கல் கால்வாய் அமைக்க அனுமதி பெறவில்லை. வருவாய்துறையினரின் அனுமதியும் பெறவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து மயிலாடுதுறை போலீசில் செயல் அலுவலர் சுரேஷ் புகார் செய்து உள்ளார்.

Similar News