செய்திகள்

புதுக்கோட்டை அருகே இன்று பட்டாசு ஆலையில் தீ விபத்து: பெண் பலி– 3பேர் காயம்

Published On 2016-04-16 17:11 IST   |   Update On 2016-04-16 17:11:00 IST
புதுக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டத்தில் பெண் பரிதாபமாக இறந்தார்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நெடுவாசல் பகுதியை சேர்ந்தவர் சக்கரராவுத்தர் (வயது 45). இவர் கோவில் திருவிழா மற்றும் திருமண விழாக்களுக்கு பட்டாசு தயாரித்து விற்பனை செய்து வந்தார். இதற்காக அங்கு ஆலை அமைத்துள்ளார்.

இந்தநிலையில் இன்று காலை அங்கு பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்றது. இதில் தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டிருந்தனர்.அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் மீது பற்றியதில் அவை பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறின. இந்த விபத்தில் சக்கரராவுத்தர் , பெண் தொழிலாளி ராபிகத் உள்பட 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

உடனே அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ராபிகத் சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News