செய்திகள்

தலைஞாயிறு அருகே கடன் தொல்லையால் மீனவர் தற்கொலை

Published On 2016-04-14 16:52 IST   |   Update On 2016-04-14 16:52:00 IST
கடன் தொல்லையால் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே உள்ள வானவன் மகாதேவி கிராமத்தை சேர்ந்தவர் குமார் (32). மீனவர். இவர் 2 தடவை வெளி நாடு சென்று உள்ளார். இவருக்கு மனைவியும், ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

குமாருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.மேலும் குடும்ப பிரச்சினையும் இருந்து வந்தது. இதனால் மனம் உடைந்த அவர் வீட்டின் கூரையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தலைஞாயிறு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News