செய்திகள்

தரங்கம்பாடியில் பள்ளி மாணவி கடத்தல்: வாலிபர் மீது தந்தை போலீசில் புகார்

Published On 2016-04-13 16:19 IST   |   Update On 2016-04-13 16:19:00 IST
தரங்கம்பாடியில் பள்ளி மாணவி கடத்திய வாலிபர் மீது தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.

தரங்கம்பாடி:

வேளாங்கண்ணி வடமலை பகுதியை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் தரங்கம்பாடியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அதேபகுதியை சேர்ந்த வெற்றி என்ற வாலிபரும் அந்த மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இந்த தகவல் அந்த பெண் படிக்கும் பள்ளிக்கு தெரியவந்தது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் அந்த மாணவியின் பெற்றோரை அழைத்து புகார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மாணவியை அவர்களது பெற்றோர் கண்டித்துள்ளனர். அதேபோல் அந்த வாலிபரையும் சந்தித்து தனது மகளுடன் சுற்றுவதை தவிர்த்து கொள்ளவும் என எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று பள்ளிக்கு தேர்வு எழுத சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு சென்று கேட்டபோது அவர் தேர்வு முடிந்தவுடன் சென்று விட்டதாக கூறியுள்ளனர்.

பின்னர் மாணவியின் தோழிகள் மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். ஆனால் அவர் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை.

எனவே தனது மகளை வெற்றி கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகம் அடைந்த அந்த மாணவியின் தந்தை பொறையாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவ செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

Similar News