செய்திகள்
மேல்மருவத்தூர் அருகே விபத்தில் ஒருவர் பலி
மேல்மருவத்தூர் அருகே விபத்தில் ஒருவர் பலி போலீசார் விசாரணை
மதுராந்தகம்:
மேல்மருவத்தூரை அடுத்த பாக்கம் அருகே சாலையை கடக்க முயன்ற வாலிபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பலியானவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவருக்கு சுமார் 40 வயது இருக்கும்.
இதுகுறித்து மேல்மருவத்தூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.