செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் அமெரிக்க டாலரை கடத்த முயன்றவர் கைது
சென்னை விமான நிலையத்தில் அமெரிக்க டாலரை கடத்த முயன்றவர் கைது
தாம்பரம்:
சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை இலங்கைக்கு செல்ல ஒரு விமானம் தயாராக இருந்தது. விமான பயணிகளை சுங்க துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த ஜாப்பர் அலி (50) என்பவர் சுற்றுலா விசாவில் இலங்கை செல்வது தெரியவந்தது.
அவரது உடமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் அமெரிக்க டாலர்கள் இருந்தது தெரிய வந்தது. இந்திய மதிப்பில் ரூ.4½ லட்சம் ஆகும். அவரிடம் இருந்து அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.