செய்திகள்
கூடுவாஞ்சேரி அருகே கல்லூரி மாணவர்களை தாக்கி நகை-பணம் கொள்ளை
கூடுவாஞ்சேரியில் கல்லூரி மாணவர்களிடம் நகை-பணம் கொள்ளையடித்த மர்ம நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு:
கூடுவாஞ்சேரியை அடுத்த பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். முதலாம் ஆண்டு படித்து வருபவர்கள் மோகன், பவன்குமார்.
இன்று அதிகாலை அவர்கள் 2 பேரும் தைலாபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 மர்ம வாலிபர்கள் அங்கு வந்தனர்.
அவர்கள் திடீரென மாணவர்கள் மோகன், பவன்குமாரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி மாணவர்கள் அணிந்திருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ. 6 ஆயிரத்தை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.
இது குறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கூடுவாஞ்சேரியை அடுத்த பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். முதலாம் ஆண்டு படித்து வருபவர்கள் மோகன், பவன்குமார்.
இன்று அதிகாலை அவர்கள் 2 பேரும் தைலாபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 மர்ம வாலிபர்கள் அங்கு வந்தனர்.
அவர்கள் திடீரென மாணவர்கள் மோகன், பவன்குமாரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி மாணவர்கள் அணிந்திருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ. 6 ஆயிரத்தை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.
இது குறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.