செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் எலுமிச்சம் பழம் விலை அதிகரிப்பு
வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் எலுமிச்சம் பழம் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், வல்லத்திராகோட்டை, வம்பன், வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தனி இடங்க ளிலும், தென்ன தோப்புகளில் ஊடுபயிராகவும் சுமார் 1000 ஏக்கரில் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது.
இப்பகுதிகளில் விளையும் எலுமிச்சம்பழங்கள் கொத்தமங்கலம், கீரமங்கலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள தனியார் மண்டிகள் மலம் கொள்முதல் செய்யப்பட்டு பல்வேறு மாவட்டங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த சில மாதங்களாக ஒரு கிலோ பழம் சுமார் ரூ.20வரை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் ஒரு கிலோ எலுமிச்சம்பழம் சுமார் ரூ.60க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து வியாபாரி ஒருவர் கூறும் போது,
குளிர்பானம், ஊறுகாய் தயாரிக்கவும், சோப்பு உள்ளிட் டவற்றுக்கு தேவையான பவுடர் தயாரிக்கவும் எலுமிச்சம் பழங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு ஏக்கரில் சுமார் 500 கிலோ அளவுக்கு எலுமிச்சம் பழம் விளைகிறது.
தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும், அம்மன் கோவில்களில் திருவிழா தொடங்கியுள்ளதாலும் எலுமிச்சம் பழத்தின் தேவை அதிகரித்து ள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக கிலோ சுமார் ரூ.20க்கு கொள் முதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.60க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்றார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், வல்லத்திராகோட்டை, வம்பன், வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தனி இடங்க ளிலும், தென்ன தோப்புகளில் ஊடுபயிராகவும் சுமார் 1000 ஏக்கரில் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது.
இப்பகுதிகளில் விளையும் எலுமிச்சம்பழங்கள் கொத்தமங்கலம், கீரமங்கலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள தனியார் மண்டிகள் மலம் கொள்முதல் செய்யப்பட்டு பல்வேறு மாவட்டங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த சில மாதங்களாக ஒரு கிலோ பழம் சுமார் ரூ.20வரை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் ஒரு கிலோ எலுமிச்சம்பழம் சுமார் ரூ.60க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து வியாபாரி ஒருவர் கூறும் போது,
குளிர்பானம், ஊறுகாய் தயாரிக்கவும், சோப்பு உள்ளிட் டவற்றுக்கு தேவையான பவுடர் தயாரிக்கவும் எலுமிச்சம் பழங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு ஏக்கரில் சுமார் 500 கிலோ அளவுக்கு எலுமிச்சம் பழம் விளைகிறது.
தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும், அம்மன் கோவில்களில் திருவிழா தொடங்கியுள்ளதாலும் எலுமிச்சம் பழத்தின் தேவை அதிகரித்து ள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக கிலோ சுமார் ரூ.20க்கு கொள் முதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.60க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்றார்.