- 17 வயது மகள் மாயமாகிவிட்டதாக பாலக்கோடு போலீசில் புகார் செய்துள்ளார்.
- யோகலட்சுமியை சீனிவாசன் பஸ் ஏற்றி அனுப்பியுள்ளார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி பெரிய கும்மனூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி யோகலட்சுமி (வயது 20). இவர்களுக்கு திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சீலேபள்ளியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு செல்வதாக கூறிய யோகலட்சுமியை சீனிவாசன் பஸ் ஏற்றி அனுப்பியுள்ளார்.
ஆனால் அவர் அங்கு செல்லவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் யோகலட்சுமி குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. எனவே தனது மனைவி மாயமானது குறித்து சீனிவாசன் பஞ்சப்பள்ளி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இதேபோல மாரண்ட அள்ளி அருகே ஈச்சம்பள்ளம் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி என்பவர் தனது 17 வயது மகள் திருப்பூரில் வேலை பார்த்து வருவதாகவும், கோவில் விழாவுக்காக ஊருக்கு வந்த அவர் காணாமல் போய் விட்டதாகவும் மாரண்ட அள்ளி போலீசில் புகார் செய்துள்ளார்.
பாலக்கோடு அருகே கடைமடை பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரும் தனது 17 வயது மகள் மாயமாகிவிட்டதாக பாலக்கோடு போலீசில் புகார் செய்துள்ளார்.