உள்ளூர் செய்திகள்

மரக்காணம் அருகே போதை பொருள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல்

Published On 2022-08-20 07:19 GMT   |   Update On 2022-08-20 07:19 GMT
  • மரக்காணம் அருகே போதை பொருள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
  • செட்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தக வுஸ்பாஷா பெட்டி கடைகளை போலீசார் சோதனை செய்தனர்.

விழுப்புரம்:

மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில்உள்ள சில கடைகளில் தடைசெய்யப்பட்ட பான், குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இது போல் போதை ப்பொருட்கள்விற்பனை செய்பவர்களை காவல் துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துவருகின்றனர். இந்நிலையில் மரக்காணம் அருகே அனுமந்தை பஸ் நிறுத்தம் மற்றும் செட்டிக்குப்பம் பகுதியில் உள்ள ஒரு சிலகடைகளில் பான், குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்க ள்விற்பனை செய்ய ப்படுவதாக மரக்காணம் போலீசார்க்கு ரகசிய தகவல்கிடைத்துள்ளது. இதனால் அனுமந்தை கிராமம் மாரியம்மன் கோவில்தெருவைச் சேர்ந்த வள்ளி, செட்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தக வுஸ்பாஷா பெட்டி கடைகளை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்களது கடைகளில் பான், குட்கா ஆகியதடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் இருந்துள்ளது. இதனால் போதைபொருட்களை பறிமுதல் செய்து 2 கடைகளுக்கும் போலீசார்சீல்வைத்தனர்.

Tags:    

Similar News