உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.

தேவாரம் அருகே 7 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது

Published On 2022-12-19 06:00 GMT   |   Update On 2022-12-19 06:00 GMT
  • பார்சலை பிரித்து பார்த்த போது அதில் 7 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
  • 2 மோட்டார் சைக்கிளையும், கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் தேவாரம் அருகே அரண்மனைத்தெரு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்தனர். அவர்கள் வைத்திருந்த பார்சலை பிரித்து பார்த்த போது அதில் 7 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து கஞ்சா கடத்தி வந்த தேவாரம் வடக்கு தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி (29), சி.எஸ்.ஐ. சர்ச் தெருவைச் சேர்ந்த ராஜூ (24) ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்கள் வந்த 2 மோட்டார் சைக்கிளையும், கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய செல்வ பாண்டி என்பவரையும் தேடி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.28 ஆயிரம் ஆகும்.

Tags:    

Similar News