உள்ளூர் செய்திகள்

கஞ்சாவுடன் கைதான வாலிபர்கள்.

தேவாரத்தில் 5 கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது

Published On 2023-07-21 04:52 GMT   |   Update On 2023-07-21 04:52 GMT
  • போலீசார் சின்ன தேவியம்மன் கண்மாய் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.
  • 5 கிலோ கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் தேவாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் தெய்வக்கண்ணன் தலைமையிலான போலீசார் சின்ன தேவியம்மன் கண்மாய் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி விசாரித்தனர்.

அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டதில் 5 கிலோ கஞ்சா வைத்திருந்ததும், இதனை விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தேவாரம் பேச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சதீஸ்குமார் (37), சுகேந்திரன் (32) ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சா மற்றும் மோட்டர் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

இவ்வழக்கு தொடர்பாக தேவாரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த முருகன் மனைவி கவிதாவை போலீசார் தேடி வருகின்றனர். சுகேந்திரன் மீது ஏற்கனவே பல்வேறு கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல் கவிதா மீதும் கஞ்சா கடத்திய வழக்குகள் உள்ளது.

Tags:    

Similar News