உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.
பெரியகுளத்தில் பணம் திருட முயன்ற 2 பேர் கைது
திருட முயன்றவர்களை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்களை பிடித்து தென்கரை போலீசில் ஒப்படைத்தார்.
பெரியகுளம்:
பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் குமார் (வயது42). இவர் தள்ளுவண்டியில் கூழ் மற்றும் மோர் விற்பனை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று அங்கு கல்லாபெட்டியில் இருந்த பணத்தை சோனிராஜா (54), சிவக்குமார் (51) ஆகியோர் திருட முயன்றனர்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்களை பிடித்து தென்கரை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.