உள்ளூர் செய்திகள்

உவரியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

Published On 2022-10-19 09:17 GMT   |   Update On 2022-10-19 09:17 GMT
  • உவரி இன்ஸ்பெக்டர் பிரேமா, சப்- இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
  • முத்துகிருஷ்ணன் ,ராமன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

திசையன்விளை:

உவரி இன்ஸ்பெக்டர் பிரேமா, சப்- இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உவரியில் உள்ள பள்ளிக்கூடம் அருகே கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து கொண்டிருந்த உடன்குடி தேரியூரை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (வயது 19), அதே ஊரை சேர்ந்த ராமன் (வயது 33) என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக தேரியூரை சேர்ந்த குருசாமி (வயது 21), உவரி ராஜா தெருவை சேர்ந்த ஜெயந்தன் (வயது 40) ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். விசாரணையில் இவர்கள் கஞ்சா மொத்த வியாபாரிகள் என தெரியவந்தது.

Tags:    

Similar News