உள்ளூர் செய்திகள்

விக்கிரவாண்டி அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

Published On 2024-12-06 09:52 IST   |   Update On 2024-12-06 09:52:00 IST

விக்கிரவாண்டி:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள செ.கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்ராஜ் (வயது35) விவசாயி.

இவரது உறவினர் வி.பாஞ்சாலத்தை சேர்ந்த தீனதயாளன் (21) சென்னை வேளச்சேரியில் தனியார் பல்கலைக் கழகத்தில் முதுகலை படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்தார் .

நேற்று மாலை 5 மணிக்கு சுரேஷ் ராஜ் தனது வயலில் மாமரத்தில் கட்டியிருந்த பசுமாட்டை அவிழ்க்க முயன்ற போது எதிர்பாரதவிதமாக அருகிலிருந்த மின்கம்பத்தின் ஒயரை பிடித்த போது மின்சாரம் தாக்கி கீழே சாய்ந்தார்.

அப்போது உடனிருந்த தீனதயாளன் அவரை துாக்க முயன்ற போது அவரையும் மின்சாரம் தாக்கியது.

இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தனர். அருகிலிருந்த பக்கத்து நிலத்துக்காரர் 2 பேரையும் சிகிச்சைக்காக காரில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி பெரியதச்சூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர் .

இறந்து போன சுரேஷ்ராஜூக்கு வேதவல்லி என்ற மனைவியும், கிருத்திகைராஜ் (8), தருண்ராஜ் (7) என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

Similar News