உள்ளூர் செய்திகள்

வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

Published On 2023-03-26 15:00 IST   |   Update On 2023-03-26 15:00:00 IST
  • விக்னேஷ் மற்றும் அவரது தம்பி சக்தி(20), உறவினர் மணிகன்டன்(29), ஆகிய 3 பேரையும் அருண்குமார், மதன் கையால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனர்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்குமார் மற்றும் மதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள ஜெகதேவி காமாச்சிபுரம் பகுதியை சேர்ந்த வர் விக்னேஷ்(வயது24). இவருக்கும் ஜெகதேவி ஜெ,ஜெ.காலணி பகுதியை சேர்ந்த அருண்குமார், காமாச்சிபுரம் மதன் இவர்களுக்குள் கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி மாரியம்மன்கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டுள்ளது, இந்த முன்விரோதம் காரணமாக கடந்த 21-ம் தேதி ஜெகதேவியில் எருது விடும் விழாவில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் விக்னேஷ் மற்றும் அவரது தம்பி சக்தி(20), உறவினர் மணிகன்டன்(29), ஆகிய 3 பேரையும் அருண்குமார், மதன் கையால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதில் காயம் அடைந்த சக்தி பர்கூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்துள்ளனர். பின்னர் விக்னேஷ் கொடுத்த புகாரின் பேரில் பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்குமார் மற்றும் மதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News