உள்ளூர் செய்திகள்
ஊட்டியில் உள்ள அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தில் 11-வது ஆண்டு திருவிழா
- கிறிஸ்தவர்களுக்கு அன்பின் விருந்து உபசரிப்பு தரப்பட்டது
- அன்னையின் திருத்தேர் அலங்காரம் மற்றும் தேர்பவனி நடத்தப்பட்டது
ஊட்டி,
ஊட்டி பேண்டு லைன் பகுதியில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா திருத்தலத்தின் 11-வது ஆண்டு திருவிழா, கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதன்ஒருபகுதியாக அன்பின் விருந்து உபசரிப்பு நடந்தது.
இதனை தி.மு.க நகர செயலாளர் ஜார்ஜ் தொடங்கி வைத்தார்.தொடர்ந்து மாலை 7 மணிக்கு அன்னையின் திருத்தேர் அலங்காரம் மற்றும் தேர்பவனி நடத்தப்பட்டது.அன்னை வேளாங்கண்ணி மாதா திருத்தேர் பவனியில் ஏராளமான கிருஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.