செய்திகள்
ஆலங்குடி தொகுதி வேட்பாளரை மாற்றக்கோரி செல்போன் டவரில் ஏறி தி.மு.க.வினர் போராட்டம்
ஆலங்குடி தொகுதி வேட்பாளரை மாற்றக்கோரி செல்போன் டவரில் ஏறி தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளராக ஆலங்குடி பாரதிநகரை சேர்ந்த டாக்டர் சதீஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் அப்பகுதியில் அறிமுகம் இல்லாதவர் என்பதால் அவருக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாக்டர் சதீசுக்கு பதில், அறந்தாங்கி ஒன்றிய குழு தலைவரும், தி.மு.க. ஒன்றிய செயலாளருமான மெய்யநாதனை அறிவிக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 4–வது நாளாக கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இன்று காலை திருவரங்குளம் பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 3பேர் அங்குள்ள செல்போன் டவரில் ஏறி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.